Thursday, April 11, 2024

விளக்கலங்காரம் நம்மூரில் !

ஒரு மூணு வாரமா நடந்துக்கிட்டு இருக்கும் கொண்டாட்டத்தைப் போய்ப் பார்க்க இப்பதான் நமக்கு நேரம் கிடைச்சுருக்கு !
நம்ம பக்கத்துப்பேட்டைதான் ! அஞ்சு கிமீவுக்கும் குறைவான தூரம். பத்து நிமிட்லே போயிறலாம்.  இன்னும் இருட்டலையே.....  அவுங்களே ராத்ரி எட்டரைக்குத்தான்  விளக்கேத்தறாங்க. ராத்ரி பத்தரைக்கு லைட்ஸ் ஆஃப்.  மணி ஒன்பதைத் தாண்டிருச்சேன்னு கிளம்பிப்போறோம்.

இந்த  அலங்காரம் ஆரம்பிச்சு இது அஞ்சாவது  வருஷம்.  நாலு லக்ஷம்  LED lights னு சொல்றாங்க. எண்ணிப்பார்க்க யாராலெ முடியும் ? :-) டிசம்பர் ஒன்னு முதல் ஜனவரி ஒன்னுவரை இருக்கும்.  இந்த வருஷம் (2024)நவம்பர் முப்பதுக்கு ஆரம்பிக்கப் போறாங்களாம். இப்பவே சொல்லிட்டாங்க. இன்னும் பெருசா இருக்குமாம் ! ஒருவேளை எட்டு லக்ஷமோ?   

இதுக்குன்னே ஒரு வலைப்பக்கம் வேற வச்சுருக்காங்க.  'நாட் இனஃப் லைட்ஸ்' னு பெயர். பாருங்க, நாலு லக்ஷம் போதலையாமே!!!! 

   http://www.notenoughlights.co.nz/

Cul de Sac லே  இந்த  ஷோ நடப்பதால்  பொதுவா வண்டிகள் போக்குவரத்து கிடையாது. ஷோ நடக்கும் நேரம், அந்தப்பகுதியில் இருக்கும் வீட்டுமக்களும் ஒத்துழைப்பதால்  அவுங்க வீட்டு வண்டி நடமாட்டங்களும் கிடையாது.  வேடிக்கை பார்க்கும் நாம்தான்  அடுத்துள்ள தெருவில் வண்டியை நிறுத்திட்டு நடந்து போகணும். போகட்டும், ஒரு ரெண்டு நிமிட் நடையில் நாமென்ன குறைஞ்சு போறோம் ? 

https://www.facebook.com/1309695969/videos/322881160657786/

இந்த வீட்டுக்கு எதிர்ப்பக்கம் இருக்கும் இன்னொரு வீட்டிலும் விளக்கு அலங்காரம் செஞ்சுருக்காங்க. 

இந்தப்பதிவை எழுதும்போதுதான் இது சம்பந்தப்பட்ட வீடியோ க்ளிப் கண்ணில் பட்டது. உடனே ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன். 
அதன் சுட்டி இதோ !

https://www.facebook.com/1309695969/videos/1186434079400386/

இலவச அனுமதின்னாலும்..... எவ்ளோ வேலை செஞ்சுருக்காங்கன்னு பார்த்தால்  மலைப்புதான்!  அதுக்காகவே  அங்கிருக்கும் உண்டியலில் நம் வகையில் கொஞ்சம் போடத்தான் வேணும். அப்படியே ஆச்சு ! 



வீடுவந்து சேர்ந்தால் 'நம்மவன்'  வாசப்பக்கம் போய்ப் பார்த்தான்.  இவனுக்கு அந்த லைட் ஷோ பார்க்கக் கொடுத்துவைக்கலை..... அதுக்காக அப்படியே விடமுடியுமா ?
இப்படித்தாண்டா இருந்ததுன்னு 'கோடி' காமிச்சோம் :-) 



Monday, April 08, 2024

மாக்கோலம் கூட போட்டாச் :-)

க்றிஸ்மஸ் பண்டிகை சமீபிச்சுருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் நடுவிலே.........  விடுமுறைக்காலம் தொடங்குமுன் இந்தவருஷத்துக்கான சமாச்சாரங்களை  முடிக்கணும்தான் !
கண்ணாடிக்குமிழில் வைக்கச் சின்ன மரத்தேடல் இன்னும் முடியலை. ஒரு கடையில் ஒரு பொண் குழந்தை எனக்காகக் காத்திருந்தாள். வீட்டுக்குக் கூட்டிவந்தேன். ஏறக்குறைய நம்ம ஜன்னுவின் உயரம் ! யூரோப்பியன். அவளை நம்மவளா மாத்தணும். 'நம்மவன்' வந்து பார்த்துட்டு ஓக்கேன்னான் ! 


முதலில் கண்களை மாத்தணும். பழைய உடுப்புகளைக் களைஞ்சு நம்ம ஸ்டைல் உடுப்புகளைப் போட்டுவிடணும். அப்படியே கொஞ்சம் அலங்காரமும். நம்ம ஜன்னுவின்  உடைகளையும் நகைகளையும் இரவல் வாங்கினேன். இனி  பெயர் வைக்கணும். ஜன்னுவின் களித்தோழி என்பதால்  பெயரும் அவள் பெயருக்குப் பொருத்தமா இருக்கணும்.  அன்னு என்று முடிவாச்சு. அனுஷ்காவின் சுருக்கம்.  ஜன்னு &  அன்னு !  நல்லா இருக்குல்லே !
ஒரு வெட் க்ரைண்டர் ஒன்னும் இன்றைக்கான வரவு. மார்ச் மாசம்தான்  பழசு , பாதி அரைக்கையில் மண்டையைப்போட்டுருச்சுன்னு ஓடிப்போய் ஒன்னு வாங்கியிருந்தோம். அது ப்ரெஸ்டீஜ். அப்போதைக்கு ஓக்கே என்றாலும் கழட்டிக் கல் எடுக்க ரொம்பவே கஷ்டமா இருந்தது.  புதுசா வேற மெஷீன்கள் வந்துருக்குன்னு போய்ப் பார்த்தால்  அல்ட்ரா  மினி இருந்தது.  அதன் உபயத்தால் வாசலில் மாக்கோலம் :-))))
நம்ம நண்பருக்கு  அவர் துறையில் தேர்வுகள் முடிஞ்சு நியூஸி அங்கீகாரம் வழங்கும் தனிப்பட்ட விழாவுக்குப் போயிருந்தோம். இவர் இந்திய வாழ்க்கையில் ஹைதராபாத், பூனா என்ற ஊர்களில் இருக்கும் தாஜ் ஹொட்டேலின் செஃப். இங்கே வந்ததும்  சிலபல ஊர்களில் வேலையில் இருந்துவிட்டு, நம்ம ஊருக்கு வந்து ஒரு  ஏழெட்டு வருஷம் ஆகிருக்கு.  (இவர் நம்மூருக்கு வந்தது நமக்கு நல்லதாப் போச்சு ! நம்ம வீட்டு விசேஷங்களுக்கு இவர்தான் பொறுப்பு ! ) விழாவில் லெவல் 3 & 4 க்கான  New Zealand Certificate வழங்குனாங்க. வாழ்க்கையில் முன்னேறணும் என்றால்  நம் துறையில் அப்படியே நின்னு போகாமல் மேற்படிப்பு,  பயிற்சின்னு நம் தகுதியை மேலும் மேலும் வளர்த்துக்கணும் ! 'நம்மவர்' போலவே இவரும் ஆர்வமா இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு !
வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்புக்குக் காத்திருந்தோம். சின்னவன் வந்தான்.  அவனுக்கும் அக்காக்களைப் பிடிச்சுப்போச்சு !

நம்ம தாமரைக்குளத்தில்  புதுச் செடியிலும் பூ !  வாங்கிவச்சு வருஷம் மூணாச்சு. போன வருஷம் குட்டியா ஒன்னு நானும் இருக்கேன்னு வந்து போனது, இப்பத்தான் முழுப்பூவா மலர்ந்துருக்கு !  ஆப்ரிகாட் நிறம் னு ஆசையோடு வாங்கிவந்தால். கொஞ்சம் வெளிறிய ஆப்ரிகாட்டா வந்துருக்கு. பலம் இல்லை போல...... வெஜிடேரியன் இல்லையோ !!!!

க்றிஸ்மஸ் நாளும் வந்துருச்சு. நாடு முழுசும் ஒரு கடையும் திறந்துருக்காது.  எங்கோ ஒரு தெருமுனை டைரியும், பெட்ரோல் பங்கும்தான் திறந்துருக்கும். டிவியில் கூட விற்பனை சம்பந்தமுள்ள எந்த கமர்ஸியலும் இருக்காது. குட் ஃப்ரைடேவுக்கும் ஈஸ்டர் நாளுக்கும் கூட  இப்படித்தான் ! 

 பொதுப்போக்குவரத்து பஸ்கள் மட்டும் ஓடும். பொதுவாகவே பஸ்ஸில் வேலைநேரங்களில் (8 -6 ) பத்திருபது ஆட்கள் இருந்தால் அதிகம்.  பாக்கி நேரங்களில் ஒன்னு ரெண்டு பேர் இருந்தால் ட்ரைவருக்கு அதிர்ஷ்டம்.  பயமாகவும் இருக்காது.  இப்போ க்றிஸ்மஸ் நாளுன்னா... சுத்தம். ஆளில்லா பஸ் ஊர் சுத்திக்கிட்டு இருக்கு!

நாமும் இந்த இடும்பியின்   சம்ப்ரதாயப்படி க்றிஸ்துவக் கோவிலுக்குக் கிளம்பினோம்.  முதலில் வீட்டாண்டை, பக்கத்துத்தெருதான் !  வழக்கம்போல் ஏகாந்த  தரிசனம் ராத்ரி பனிரெண்டுக்குக் குழந்தை பொறந்தாச் ! (உண்மையில் அப்போ நடுநிசி ஆகலை. டேலைட் ஸேவிங் காலம் என்பதால் பதினொன்னுதான், கேட்டோ !)



அங்கிருந்து கார்ட்போர்ட் கதீட்ரல்.  நாளும் கிழமையுமா மூடி வச்சுருக்காங்க. இது தாற்காலிகம்னு சொல்லிதான்  கட்டுனாங்க.  போறபோக்கைப் பார்த்தால் இது நிரந்தரமாகிரும்னு தோணுது.  13 வருஷங்களுக்கு முன் நிலநடுக்கத்தில் இடிஞ்சு போன எங்க க்றைஸ்ட்சர்ச் கதீட்ரலை இன்னும் கட்டிமுடிச்ச பாடில்லை.  அப்பவே பலநாடுகள் தாமாக முன்வந்து பழுது பார்த்துத் தர்றோமுன்னு சொன்னதை சர்ச் மேலிடம் ஒத்துக்கலை. கர்வமா இருந்துட்டு இப்போ கர்வபங்கம்.
ஒரு நாலைஞ்சு வருஷத்துக்குமுன்  பழுது பார்க்கறோமுன்னு ஆரம்பிச்சு வேலைகள் ஆமை வேகத்தில் (! ) நடந்துக்கிட்டு இருக்கு. மக்கள் பலரும் நம்மூர் என்ற அபிமானத்தில் பொருளுதவி செய்தோம்தான்.  இப்ப  அந்த நிதி போதாதாம். இன்னும் முப்பது மில்லியன் (மூணு கோடி டாலர் ) வேணுமாம். கொடுக்கலைன்னா   நடந்துக்கிட்டு இருந்த வேலையை அப்படியே விட்டுருவாங்களாம்.  விட்டுட்டுப்போங்க..... யாராலெ முடியும் என்ற நிலைக்கு  மக்கள்  வந்தாச்.  முந்தியெல்லாம் அந்தப் பக்கம் போனாலே கண்ணுலே ஜலம் வச்சுப்பேன். இப்போ  இல்லை.  கல்மனசு வந்துருக்கு இதுலே மட்டும். ப்ச்....

நல்ல வெயிலும் இருக்குன்னு அப்படியே கடற்கரைப் பக்கம் போனோம். நியூஸிக்குன்னே ஒரு வகை க்றிஸ்மஸ் மரம் இருக்கு, தெரியுமோ !


பொஹுட்டுக்காவா (  Pohutukawa) என்று மவொரி பெயர்.  மவொரி மக்களுக்கு  இது ரொம்பவே புனிதமான மரம்.  மவொரி போர்வீரர்  (young Maori warrior, Tawhaki )ஒருவருடைய  தகப்பனை, எதிரிகள் கொன்னுட்டாங்க. அவுங்களைப் பழிவாங்கணும். தன் ஒருவரால் முடியாத காரியம். உதவி வேண்டி  மேலுலகம் நோக்கிப் போறார். மவொரிகளின் கடவுள் நம்பிக்கை, கலாச்சாரத்தின் படி ஆகாயமே தந்தை, பூமியே தாய் !   இவருடைய பயணம் தோல்வியில் முடிஞ்சு அங்கிருந்து கீழே விழுந்துடறார். அவருடைய ரத்தம் தெறித்த இடத்தில் எல்லாம் சிகப்பு நிறமுள்ள பூக்கள்  பூக்கும் மரம் முளைச்சுருது.  அந்த மரம்தான் இந்த மரம் ! இப்ப மஞ்சப்பூவும்   வந்துருச்சு !    

 கடற்கரையையொட்டியே இந்த மரங்கள் முளைக்கும். பச்சையும் சிகப்புமா பார்க்கவே ஒரு அழகு ! எனக்கு ரொம்பவும் பிடிச்ச மரமும் கூட.  கோடையில் மலரும் பூக்கள், நம்ம க்றிஸ்மஸ் காலத்தோடு சேர்ந்து போச்சு ! 


மரங்களை ரசிச்ச கையோடு நம்ம சம்னர் வாழ் வரசித்திவிநாயகரையும் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு சில யானைகளையும் பார்த்துட்டு வந்தோம்.      ( இதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்றேன் !) 

பண்டிகை நாளிலே சர்ச்சுலே ஆளைக்காணோம். ஊர்சனம் முழுக்க பீச்சுலே இருக்கு.

 கொஞ்சம் ஓய்வெடுங்க. இருட்டுனாவுட்டு  ஒரு இடத்துக்குப் போகலாம் !   


Friday, April 05, 2024

டிசம்பர், எங்களுக்குக் கோடை !

டிசம்பர் ஒன்னாம் தேதி முதல் எங்களுக்குக் கோடை காலம் !  காலமாற்றத்தைக் கொண்டாடக் கடற்கரை வரை போய் வந்தோம். போகும் வழியில் இருக்கும் நம்ம சநாதன் ஹாலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டோம்.  இனி   பகல்பொழுதுகள் நீண்டு கொண்டு போகும்! 
சூரிய அஸ்தமனம் இரவு  ஒன்பதுக்குப்பிறகு!  ட்வைலைட் என்னும்  மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்  இன்னொரு ஒன்னரை மணிக்காலம்.  கிட்டத்தட்ட ராத்ரி பதினொன்னுக்குத்தான் இருட்டு !
 வீட்டிலும்,  நகரமையத்திலும் க்றிஸ்மஸ் விழாவுக்கான தீப அலங்காரங்களைச் செய்யலாமுன்னா....  இருட்டினால்தானே ?  இருட்டுவர தேவுடு காக்கவேணும்தான் ! கீழே படம் இரவு எட்டரை.
இரவு 9.30

விழாக்காலம் & கோடை காலம் கூடவே வருஷாந்திர விடுமுறைக்காலம் என்றபடியால்  விடுமுறை ஆரம்பிக்குமுன் வருஷக்கடைசி பார்ட்டின்னு நவம்பர் கடைசி வாரத்துலேயே ஆரம்பிச்சுரும்.  எதுக்கு இவ்ளோ சீக்கிரமா ?  பார்ட்டி நடத்திக்கும் ஹால்கள் வாடகைக்குக் கிடைப்பது கஷ்டம் என்பதால் முந்திக்கோ முந்திக்கோதான் !

நம்ம யோகா வகுப்புக்கும் விடுமுறைக் காலம் உண்டு. அதனால் கடைசி வகுப்பில்  க்றிஸ்மஸ் பார்ட்டி ! ட்ரெஸ் கோட்.... க்றிஸ்மஸ் கலர்ஸ் :-)தீனி வகைகள் ஆளுக்கொன்னு கொண்டு போனால் ஆச்சு !   

மராத்தியர்களின் குழு ஒன்னு , கலைவிழாக் கொண்டாட்டத்துக்கு விருந்தினரா அழைச்சாங்க.  நமக்கும் பூனா வாழ்க்கை அனுபவம் இருக்குல்லே ! நம்ம யோகா குடும்பத்திலும்  மராத்தியர்கள் பெரும்பான்மை !  Swar Sandhya என்று  பாட்டு நடனம்னு அருமையான நிகழ்ச்சியாக இருந்தது.  'ஹிடன் டேலண்ட்' ன்னு சொல்லும் வகையில் நம்ம மக்களிடம் மறைந்திருக்கும்  கலை ஆர்வமும், ஆற்றலும் கண்ணுக்கெதிரில் ! 



நம்ம யோகா குடும்ப அங்கத்தினர் தூள் கிளப்பிட்டாங்க ! அப்போ பேஸ்புக்கில் போட்டுருந்தேன்.  நேரம் இருப்பின் கீழே உள்ள சுட்டியில்  பார்க்கலாம்.

https://www.facebook.com/1309695969/videos/3245983945705444/

https://www.facebook.com/1309695969/videos/695303876036215/
https://www.facebook.com/1309695969/videos/367342305877055/

https://www.facebook.com/1309695969/videos/689449019980922/

https://www.facebook.com/1309695969/videos/339175302196936/

நிகழ்ச்சி முடிஞ்சு வெளியே வந்தால் அடுத்துள்ள வீட்டில் க்றிஸ்மஸ் ஒளி அலங்காரம் ! பொதுவாக வீடுகளின் வெளியில் இங்கே அலங்கரிப்பதெல்லாம்  அத்தி பூத்தாற்போலத்தான் !   ரொம்ப வருஷங்களுக்கு முன் உள்ளூர் பேட்டை ஒன்னில் அக்கம்பக்கத்து வீடுகளெல்லாம் சேர்ந்து அந்தத் தெருக்களையெல்லாம்  விளக்குகளால் அலங்கரிச்சாங்க. ஊரே போய் வேடிக்கை பார்த்தது.  அப்புறம் ரெண்டு வருஷத்துக்குப்பிறகு அதை நிறுத்திட்டாங்க.  பார்வையாளர்கள் ஒழுங்கா இல்லையாம். (இத்தனைக்கும் ஏகப்பட்ட  ரூல்ஸ் போட்டு வச்சும் ! ) போகட்டும் போ.....

இப்ப ரெண்டு வருஷமா நம்ம பேட்டைக்குப் பக்கத்துப்பேட்டையில் ஒரு சில வீடுகளில் அலங்காரம் வந்துருக்கு. நாம் விடுவோமா ? போகணும்தான்.  இப்ப இந்த அடுத்த வீட்டைப் பார்த்துட்டுப் போகலாமா ? 

நாள் எப்படி ஓடுது பாருங்க..... இதோ நாளைக்கு மார்கழி பிறக்குது...... நம்ம ஜன்னுவின்  தீபாவளி வேஷத்தைக் களைஞ்சு ஜன்னாண்டாளாக மாத்தணும். இந்த வருஷம் பாவாடை தாவணியில் குட்டிப்பொண்ணாக இருக்கட்டும், பொழுதன்னிக்கும்  மடிஸார் என்ன வேண்டிக்கிடக்கு ? 

நம்மூர்லே ரோட்டரி க்ளப்  ஞாயிறு சந்தைன்னு  ஒன்னு 1989 இல் ஆரம்பிச்சது. அப்பெல்லாம்  அவரவர் ஏதாவது விற்கணும் என்றால்  அவரவர் கார்பூட்டில் வச்சு வித்துருவாங்க. இப்படி வண்டிகளை எல்லாம் ஒரு பொது இடத்தில் சேர்ந்தாப்லெ  நிறுத்துவதால் ..... வாங்கும் மக்களுக்கும் ஒரு  பொழுதுபோக்குபோலச் சுத்திப்பார்த்து தேவையானது கண்ணில் ஆப்ட்டா  வாங்கிக்கலாம்.

அதுக்குப்பிறகு விற்பனை செய்யும் மக்கள் பெருகியதால் நம்ம (பழைய)வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஷாப்பிங் சென்ட்டர் கார்பார்க்கில் தரையில் விரிப்புப்போட்டு அவரவர் கொண்டுவரும் பொருட்களை விற்க ஆரம்பிச்சாங்க.   நான் குக்கர் வச்சுட்டு,   தேவையான  நேரம் ஆனதும்,  அடுப்பை அணைச்சுட்டு, நீராவி வெளியேற எடுக்கும் நேரத்தில்  சாலையைக் கடந்து எதிர்சாரிக்குப்போய்   மார்கெட்டை வேடிக்கை பார்த்துட்டு வந்துருவேன். 

கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சு போய், நம்மூர் ரேஸ் கோர்ஸ் பார்க்கில் பெரிய அளவில் இப்போ நடக்குது. பழைய பொருட்கள் மட்டுமில்லாமப் புதுப்பொருட்களும், காய்கறிகள் பழங்கள், பூச்செடிகள், பூக்கள்,  காய்கறிச் செடிகளின் நாற்றுகள்,  ஆன்டிக் பொருட்கள் , தீனிகள்னு  ஏராளம் ஏராளம்.  ஃபுட்கோர்ட்னு  இருக்கும் கடைகளில் மதிய உணவை வாங்கிக்கிட்டு உக்காந்து சாப்பிட இருக்கைகள் போட்டு வச்சுருமிடத்தில்  பொழுதுபோக்குக்காக..... ஏதாவது பாட்டு நிகழ்ச்சி வேற நடக்கும்.  ரோட்டரியின் ஏற்பாடுதான் !  சின்னப்பிள்ளைகளுக்காக விளையாட்டு சமாச்சாரங்களாக மெர்ரிகோ ரௌண்ட், பௌன்ஸிங் காஸில்ன்னு ஒரு பக்கம்.   நியூஸியின் தெற்குத்தீவின் மிகப்பெரிய சந்தை !  நியூஸிக்கு வரும்  பயணிகளை பஸ்ஸில் கொண்டுவந்து காமிக்கிறாங்கன்னா பாருங்க !









ஸ்டால் போடும் மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகை அடைக்கணும்.  செலவு போக பாக்கிக் காசை ரோட்டரி க்ளப், தர்ம காரியங்களுக்குக் கொடுத்துரும் ! இதுவரை மூணு மில்லியன் டாலர்கள் தருமம் செஞ்சுருக்கறதாச் சொல்றாங்க. இருக்கும் தான்,  ஆச்சே 35 வருஷம்!

பொதுவா எல்லார் வீட்டுலேயும் வேண்டாத பொருட்கள்னு  கொஞ்சம் இருக்கும்தானே? கராஜ் ஸேல் (யார்ட் ஸேல்)னு வீட்டுலே வச்சு வித்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்படி மக்கள் கூடும் இடத்துலே கொண்டு வந்து வச்சால்  சுலபமா விற்பனை ஆகிரும் !  இதுவும் நம்ம வீட்டாண்டைதான். ஒரு ஒன்னேகால் கிமீ  இருக்கும். ரேஸ் கோர்ஸ் என்பதால் பார்க்கிங் பிரச்சனை இல்லை.  குறிப்பா ஒன்னும் வாங்கிக்கலைன்னாலும்கூட சந்தையைச் சுத்திப்பார்க்கன்னு போவோம்தான். ஒரு மூணு நாலு கிமீ நடை ஆச்சு  ! கோடைகாலத்தில் நம்ம நடை இங்கே.... குளிர்காலத்தில் ஷாப்பிங் மால்களில் :-) 

ஞாயிறு  காலை ஒன்பது  முதல் பகல் ரெண்டு மணி மார்கெட். பகல் சமையலை முடிச்சுட்டு, மார்கெட் சுற்றுலா போய் வந்தால் லஞ்ச்!   எல்லா வாரமும் போவதில்லை. குறைஞ்சது மாசம் ஒன்னு அல்லது ரெண்டு முறைதான்.

லண்டன்லே போர்ட்டபெல்லோ ரோடு  மார்க்கெட்( Portobello Road  Market  ) போலன்னு வச்சுக்குங்க.      




இன்றைக்குப்போனால் அங்கேயும் முதல் முறையா க்றிஸ்மஸ் அலங்காரங்கள் செஞ்சுருந்தாங்க.  வேடிக்கை பார்த்துட்டு, ஒரு ஸ்டாலில் புகைவிடும் யானையை வாங்கி வந்தோம் !